செய்யாறு அருகே - ஏரியில் இருந்து இளைஞர் உடல் மீட்பு :

செய்யாறு அருகே -  ஏரியில் இருந்து இளைஞர் உடல் மீட்பு :
Updated on
1 min read

செய்யாறு அருகே கை மற்றும் கால்கள் கட்டப்பட்ட நிலையில் ஏரியில் இருந்து இளைஞர் உடலை காவல் துறையினர் நேற்று மீட்டனர்.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த பூதேரி ஏரியில் இளைஞர் உடல் மிதப்பது நேற்று காலை தெரியவந்தது.

இதுகுறித்து தகவலறிந்த மோரணம் காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அப்போது, கை மற்றும் கால்கள் கட்டப்பட்ட நிலையில் உடல் இருந்துள்ளது.

மேலும், அவரது முகம் மற்றும் உடல்களில் ரத்த காயங்களும் இருந்தன. இதனால், அவரை அடித்துக் கொலை செய்த

பிறகு, அவரது கை மற்றும் கால்களை கட்டி, ஏரியில் வீசப்பட்டிருக்கலாம் என காவல் துறையினர் தெரிவிக்கின்றனர். சுமார் 35 வயது மதிக்கக்கூடிய இளைஞர், யார் மற்றும் எந்த ஊரைச் சேர்ந்தவர் என தெரியவில்லை.

இது குறித்து மோரணம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து இளைஞர் குறித்தும் மற்றும் அவரை கொலை செய்தவர்கள் யார்? என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in