வாக்காளர் அட்டை அளிக்க இயலாதவர்கள் - எந்தெந்த ஆவணங்களை காண்பித்து வாக்களிக்கலாம்? : திருப்பூர் ஆட்சியர் விளக்கம்

வாக்காளர் அட்டை அளிக்க இயலாதவர்கள் -  எந்தெந்த ஆவணங்களை காண்பித்து வாக்களிக்கலாம்? :  திருப்பூர் ஆட்சியர் விளக்கம்
Updated on
1 min read

வாக்காளர் அட்டைக்கு பதிலாக, வேறு எந்தெந்த அடையாள அட்டைகள் காண்பித்து வாக்காளர்கள் வாக்களிக்கலாம் என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக திருப்பூர் ஆட்சியர் க.விஜயகார்த்திகேயன் கூறும்போது, "ஏப்ரல் 6-ம் தேதி நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தலில், வாக்காளர் அடையாள அட்டையை காண்பித்து வாக்களிக்கலாம். அவ்வாறு வாக்காளர் அட்டை அளிக்க இயலாதவர்கள், மாற்று புகைப்பட அடையாள ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை வாக்குச்சாவடி மையத்தில் காண்பித்து வாக்களிக்கலாம்.

அதன்படி, ஆதார் அட்டை, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டப் பணி அட்டை, வங்கி அல்லது அஞ்சலக கணக்குப் புத்தகங்கள் (புகைப்படத்துடன் கூடியது), தொழிலாளர் நல அமைச்சக திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட மருத்துவக் காப்பீட்டு ஸ்மார்ட் அட்டை, ஓட்டுநர் உரிமம், பான் கார்டு, தேசிய மக்கள்தொகை பதிவேட்டின் கீழ் இந்திய தலைமைப் பதிவாளரால் வழங்கப்பட்ட ஸ்மார்ட் அட்டை, கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்), புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணம், மத்திய அல்லது மாநில அரசின் பொதுத்துறை நிறுவனங்கள் அல்லது வரையறுக்கப்பட்ட பொது நிறுவனங்கள் ஆகியவற்றால் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய பணி அடையாள அட்டைகள், மக்களவை அல்லது சட்டப்பேரவை அல்லது சட்டமேலவை உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அலுவலக அடையாள அட்டை இவற்றில் ஏதேனும் ஒன்றை காண்பித்து வாக்களிக்கலாம்" என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in