காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் பிரம்மோற்சவம் - 63 நாயன்மார்கள் இன்று ஈசனுடன் வீதியுலா :

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் பிரம்மோற்சவம் -  63 நாயன்மார்கள் இன்று ஈசனுடன் வீதியுலா :
Updated on
1 min read

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் பிரம்மோற்சவத்தின் ஒரு பகுதியாக மார்ச் 23-ம் தேதி (இன்று) 63 நாயன்மார்கள் வீதியுலா வரும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

ஏகாம்பரநாதர் கோயில் பிரம்மோற்சவம் கடந்த 18-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினம்தோறும் காலை, மாலை உற்சவர் வீதியுலா வரும் நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. தினம்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கோயிலுக்கு வந்து ஏகாம்பரநாதரை தரிசிப்பதுடன், விழாவிலும் பங்கேற்கின்றனர்.

இந்த விழாவின் முக்கிய நிகழ்வான 63 நாயன்மார்கள் வீதியுலாவரும் நிகழ்ச்சி இன்று காலை நடைபெறுகிறது. மாலையில் வெள்ளித் தேரோட்டமும் நடைபெற உள்ளது. நாளை காலையில் தேரோட்டம் நடைபெற உள்ளது. முக்கிய நிகழ்வான பங்குனி உத்திர திருக்கல்யாண நிகழ்ச்சி வரும் 28-ம் தேதி அதிகாலை நடைபெற உள்ளது.

காஞ்சிபுரம் மட்டுமின்றி அருகாமையில் உள்ள பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் பங்கேற்கின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in