விருதுநகரில் வணிகர்களுக்கு சேவை மையம் அமைக்க திட்டம் : பாஜக பொதுச்செயலாளர் னிவாசன் தகவல்

விருதுநகரில் வணிகர்களுக்கு சேவை மையம் அமைக்க திட்டம் :  பாஜக பொதுச்செயலாளர் னிவாசன் தகவல்
Updated on
1 min read

விருதுநகர் தொகுதியில் வணிகர்களுக்கு சேவை மையம் அமைக்கத் திட்டமிட்டுள்ளோம் என்று பாஜக மாநில பொதுச் செயலாளரும் விருதுநகர் சட்டப் பேரவைத் தொகுதி மேற்பார்வையாளருமான னிவாசன் தெரிவித்தார்.

விருதுநகரில் உள்ள பாஜக தேர்தல் அலுவலகத்தில் அவர் செய்தியாளர்களிடம் கூறிய தாவது: பிரதமர் மோடி விரைவில் தமிழகம் வர உள்ளார். அதை யொட்டி மதுரையில் தென்மாவட்ட வேட்பாளர்களை முன்னிறுத்தி பிரச்சாரப் பொதுக்கூட்டம் நடத்த திட்டமிட்டு வருகிறோம்.

திமுக எம்.எல்.ஏ சீனிவாசன் தொகுதிக்கு இதுவரை எதுவும் செய்யவில்லை. விருதுநகர் தொகுதியில் வணிகர்களுக்கு சேவை மையம் அமைக்கத் திட்டமிட்டுள்ளோம். அதன் மூலம் அவர்களுக்கு அனைத்து உதவிகளையும் செய்வோம். வளர்ச்சி திட்டங்களை மையமாக வைத்தே தேர்தல் வாக்குறுதிகளை அளிக்கிறோம். இத்தொகுதியில் ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு முழுமையாக வழங்கப்படும் என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in