திருவள்ளூரில்ரூ.71 லட்சம் பணம் பறிமுதல் :

திருவள்ளூரில்ரூ.71 லட்சம் பணம் பறிமுதல் :
Updated on
1 min read

திருவள்ளூர் மாவட்டத்தில் முறையான ஆவணங்கள் இன்றி கொண்டு வரப்பட்ட ரூ.71 லட்சம் பணம் இதுவரை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளில் இதுவரை 70.95 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில், அதிகபட்சமாக திருவள்ளூர் மாவட்டத்தில் ரூ.12.36 லட்சமும், அடுத்தபடியாக, மதுரவாயல் தொகுதியில் ரூ.12.94 லட்சமும், கும்மிடிப்பூண்டி தொகுதியில் ரூ.10.02 லட்சமும், மாதவரம் தொகுதியில் ரூ.9.74 லட்சமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இதில், உரிய விசாரணை நடத்தி ரூ.49.11 லட்சம் பணம் உரியவர்களிடம் திருப்பி அளிக்கப்பட்டுள்ளதாக, மாவட்ட தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in