சிவகங்கை மாவட்டத்தில் மாணவர்கள், மருத்துவர்கள் உட்பட 25 பேருக்கு கரோனா :

சிவகங்கை மாவட்டத்தில் மாணவர்கள், மருத்துவர்கள் உட்பட 25 பேருக்கு கரோனா :
Updated on
1 min read

சிவகங்கை மாவட்டத்தில் சில நாட்களாக கரோனா தொற்று தீவிரமடைந்து வருகிறது. கல்லல் அருகே செம்பனூரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் பிளஸ்-2 மாணவர்கள் மூன்று பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது.

அதேபோல் சிவகங்கை மஜித் சாலையில் கிளினிக் நடத்தி வரும் மருத்துவருக்கும், அதே பகுதியில் வசிக்கும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேருக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வாணியங்குடியைச் சேர்ந்த அரசு மருத்துவரும் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.

மாவட்டத்தில் கடந்த 2 நாட்களில் மட்டும் மொத்தம் 25 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இவர்களுக்கு சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பாதிக்கப்பட்டவர்கள் வசிக்கும் பகுதிகளில் சுகாதாரத் துறையினர் சளி மாதிரிகளை சேகரித்து வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in