ஒருதலை காதல் விவகாரத்தில் - களக்காடு அருகே குழந்தை கொலை : போதகர், மனைவிக்கு அரிவாள் வெட்டு

ஒருதலை காதல் விவகாரத்தில்  -  களக்காடு அருகே குழந்தை கொலை :  போதகர், மனைவிக்கு அரிவாள் வெட்டு
Updated on
1 min read

திருநெல்வேலி மாவட்டம் திருக்குறுங்குடியில் ஒருதலை காதல்பிரச்சினையில் 8 மாத பெண்குழந்தை கொலை செய்யப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

களக்காடு அருகே திருக்குறுங்குடியில் உள்ள பெந்தேகொஸ்தே சபையில் போதகராக இருப்பவர் ரசூல்ராஜ் (58). இவரது மனைவி எப்சிபாய் (52). இவர்களுக்கு 5 மகள்கள் உள்ளனர். மூத்த மகள்திருமணமாகி கணவருடன் வெளிநாட்டில் வசித்து வருகிறார். மூத்த மகள் வழி பேத்தியான 8 மாத பெண் குழந்தை அக்‌ஷா குயின்சியை ரசூல்ராஜும், எப்சிபாயும் பராமரித்து வந்தனர். இவர்களது 4-வதுமகள் கோவையில் தனியார் மருத்துவமனையில் செவிலியராக உள்ளார். இவரை களக்காடு ரோஸ்மியாபுரத்தை சேர்ந்த சிவசங்கரன் (25) என்பவர் ஒருதலைபட்சமாக காதலித்து வந்ததாக தெரிகிறது.கடந்த ஒரு மாதத்துக்கு முன் சிவசங்கரன் குடும்பத்தினர் பெண் கேட்டுவந்தனர். ஆனால் மகளை திருமணம்செய்து கொடுக்க ரசூல் ராஜின் குடும்பத்தினர் மறுத்துவிட்டனர்.

இதனால் அவர்களுக்குள் முன்விரோதம் இருந்தது. நேற்று அதிகாலையில் ரசூல்ராஜ் வீட்டருகே நடைபயிற்சி மேற்கொண்டிருந்தார். எப்சிபாயும், பேத்தியும் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென்று வீட்டுக்குள் புகுந்த சிவசங்கரன், அரிவாளால் எப்சிபாய் மற்றும் குழந்தையை வெட்டினார். அலறல் சத்தம் கேட்டுஅங்கு ஓடிவந்த ரசூல்ராஜையும் அரிவாளால் வெட்டிவிட்டு, வீட்டுக்கு தீ வைக்க முயன்றுள்ளார். ஆனால் அக்கம்பக்கத்தினர் வந்ததால் அங்கிருந்து தப்பியோடிவிட்டார். திருக்குறுங்குடி போலீஸார் அங்குவந்து காயமடைந்தவர்களை மீட்டு நாகர்கோவில் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி குழந்தை அக்‌ஷா குயின்சி உயிரிழந்தது. சிவசங்கரனை பிடித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in