Published : 20 Mar 2021 03:14 AM
Last Updated : 20 Mar 2021 03:14 AM

காஞ்சிபுரம் மாவட்ட தேர்தல் பணிகள் - பொதுப் பார்வையாளர் ஆய்வு :

காஞ்சிபுரம் மாவட்டத்தில் தேர்தலையொட்டி ஊடக மையம், ஊடகச் சான்று மற்றும் கண்காணிப்புக் குழு, 1950 வாக்காளர் வலைதள உதவி மையம் மற்றும் 24 மணி நேரமும் செயல்பட்டு வரும் தேர்தல் கட்டுப்பாட்டு அறை ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன.

இந்த மையங்களை காஞ்சிபுரம், உத்திரமேரூர் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான தேர்தல் பார்வையாளர் கைலாஷ் சந்த் குப்தா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலர் மகேஸ்வரி, மாவட்ட வருவாய் அலுவலர் பன்னீர்செல்வம், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் பாலமுருகன் (தேர்தல்) உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x