காவல் பார்வையாளர் நாமக்கல்லில் ஆய்வு :

காவல் பார்வையாளர் நாமக்கல்லில் ஆய்வு :
Updated on
1 min read

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 6 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் காவல் பார்வையாளராக மத்தியப்பிரதேச மாநில டிஐஜி என்.சைத்ரா நியமிக்கப் பட்டுள்ளார்.

இவர் நாமக்கல் கோட்டாட்சியர் அலுவலகம், ராசிபுரம் வட்டாட்சியர் அலுவலகம் ஆகிய இடங்களில் நாமக்கல், ராசிபுரம் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறை, காவல்துறை பாதுகாப்பு, சிசிடிவி கேமரா மூலம் கண்காணிக்கும் பணிகளை பார்வையிட்டார்.

நாமக்கல் கோட்டாட்சியர் மு.கோட்டைகுமார், ராசிபுரம் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரான வி.சக்திவேல், ராசிபுரம் காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் பாலமுருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in