போலீஸாருக்கு கரோனா தடுப்பூசி :

போலீஸாருக்கு கரோனா தடுப்பூசி :
Updated on
1 min read

திருநெல்வேலி மாவட்டத்தில் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, பல்நோக்கு மருத்துவமனை மற்றும் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களில் கரோனா தடுப்பூசி போடப்படுகிறது. பாளையங்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் காவலர்களுக்கு தடுப்பூசி போடுவதற்காக மாநகராட்சி சார்பில் சிறப்பு முகாம் நடைபெற்றது. ஆயுதப்படையில் பணியாற்றும் போலீஸார் கோவிஷீல்டு தடுப்பூசி போட்டுக்கொண்டனர். மேலும் அவர்களது குடும்பத்தை சேர்ந்த 45 வயதுக்கு மேற்பட்டவர்களும், இணை நோய் உள்ளவர்களும் தடுப்பூசி செலுத்திக்கொண்டனர்.

மாநகர நகர் நல அலுவலர் சரோஜா, மருத்துவ அலுவலர் தமிழரசி மற்றும் பாளையங்கோட்டை மண்டல சுகாதார ஆய்வாளர் நடராஜன் ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in