Published : 19 Mar 2021 03:14 AM
Last Updated : 19 Mar 2021 03:14 AM

உதகை, குன்னூர், கூடலூர் சட்டப்பேரவைத் தொகுதிகளில் - அரசியல் கட்சிகள், சுயேச்சை வேட்பாளர்கள் மனு தாக்கல் :

நீலகிரி மாவட்டத்தில் உள்ள உதகை, குன்னூர் மற்றும் கூடலூர் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வேட்பு மனு தாக்கல் நடந்து வருகிறது.

உதகை சட்டப்பேரவை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஆர்.கணேஷ், பாஜக வேட்பாளர் மு.போஜராஜன், அமமுக வேட்பாளர் தேனாடு டி.லட்சுமணன், இந்து மக்கள் கட்சி வேட்பாளர் என்.சிவா ஆகியோர் உதகை கோட்டாட்சியர் அலுவலகத்தில் சார் ஆட்சியர் மோனிகா ராணாவிடம் நேற்று வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர்.

குன்னூர் சட்டப்பேரவைத் தொகுதியில் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் ஹெச்.பி.ராஜ்குமார் மற்றும் சுயேச்சையாக கே.சந்திரன் ஆகியோர் கோட்டாட்சியர் ரஞ்சித்சிங்கிடம் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.

கூடலூர் சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக வேட்பாளர் பொன்.ஜெயசீலன், மாற்று வேட்பாளராக தங்கவேல், திமுக வேட்பாளர் எஸ்.காசிலிங்கம், மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் ஜீவன், நாம் தமிழர் வேட்பாளர் ரா.கேதீஸ்வரன், சுயேச்சையாக பி.ஜெயபிரகாஷ் ஆகிய 6 பேர் கோட்டாட்சியர் ராஜ்குமாரிடம் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர்.

நேற்று உதகை தொகுதிக்கு 4, குன்னூர் தொகுதிக்கு 2 மற்றும் கூடலூர் தொகுதிக்கு 6 பேர் என மொத்தம் 12 பேர் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.

அதிமுக வேட்பாளர் விதிமீறல்

தேர்தல் விதிமுறைப்படி, மனு தாக்கல் செய்யும்போது, வேட்பாளருடன் இரு நபர்கள் மட்டுமே இருக்க வேண்டும் என்ற நிலையில், கூடலூர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் பொன்.ஜெயசீலன் மனு தாக்கல் செய்தபோது, அவருடன் முன்னாள் அமைச்சர் அ.மில்லர், அதிமுக வர்த்தகப் பிரிவு மாநிலத்தலைவர் சஜீவன், நகர செயலாளர் அனூப் கான் மற்றும் பாஜகவினர் இருவர் உடன் இருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.கூடலூர் கோட்டாட்சியர் ராஜ்குமாரிடம் வேட்பு மனு அளித்த அதிமுக வேட்பாளர் பொன்.ஜெயசீலன்.உதகை சார் ஆட்சியர் மோனிகா ராணாவிடம் வேட்புமனு அளித்த காங். வேட்பாளர் ஆர்.கணேஷ், (அடுத்த படம்)பாஜக வேட்பாளர் மு.போஜராஜன், (கடைசி படம்)அமமுக வேட்பாளர் தேனாடு டி.லட்சுமணன். படங்கள்:ஆர்.டி.சிவசங்கர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x