நகைப் பட்டறை உரிமையாளர் வீட்டில் 10 பவுன் நகை திருட்டு :

நகைப் பட்டறை உரிமையாளர் வீட்டில் 10 பவுன் நகை திருட்டு :
Updated on
1 min read

நகைப் பட்டறை உரிமையாளர் வீட்டில் 10 பவுன் நகையை திருடி தலைமறைவான மர்ம நபர்களை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

நாமக்கல் சந்தைபேட்டை புதூரைச் சேர்ந்தவர் நகைப் பட்டறை உரிமையாளர் அருண்குமார் (36). நேற்று முன்தினம் காலை வீட்டை பூட்டி விட்டு தனது மனைவி கோமதியுடன் வெளியூர் சென்றுள்ளார். மாலையில் வீட்டிற்கு பால் ஊற்ற வந்த நபர் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து அவர் அருண்குமாருக்கு தகவல் தெரிவித்தார்.

விரைந்து வந்த அருண்குமார் வீ்ட்டுக்குள் சென்று பார்த்தபோது 10 பவுன் நகை மாயமாகியிருப்பது தெரியவந்தது. இதுதொடர்பாக நாமக்கல் காவல் துறையில் அருண்குமார் புகார் செய்தார். புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் நகையை திருடி தலைமறைவான மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in