முயல் வேட்டையாடிய தந்தை, மகன் கைது: நாட்டுத் துப்பாக்கி பறிமுதல் :

முயல் வேட்டையாடிய தந்தை, மகன் கைது: நாட்டுத் துப்பாக்கி பறிமுதல் :
Updated on
1 min read

சேந்தமங்கலம் அருகே தேர் புளியமரம் பகுதியில் சேந்தமங்கலம் காவல் துறையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த இருவரை நிறுத்தி விசாரணை நடத்தினர்.

விசாரணையில் நாமக்கல் குறவர் காலனியைச் சேர்ந்த தேசிங்கு (50), அவருடைய மகன் பிரபாகரன் (24) எனத் தெரியவந்தது. இவர்கள் நாட்டு துப்பாக்கியை பயன்படுத்தி 6 முயல்களை வேட்டையாடி கொண்டு வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீஸார், முயல்கள் மற்றும் 2 நாட்டு துப்பாக்கிகளை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in