காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் - கொடியேற்றத்துடன் பிரம்மோற்சவம் தொடக்கம் :

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் பிரம்மோற்சவத்தை ஒட்டி நடைபெற்ற கொடியேற்றம்.
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் பிரம்மோற்சவத்தை ஒட்டி நடைபெற்ற கொடியேற்றம்.
Updated on
1 min read

காஞ்சிபுரம் காமாட்சி அம்பாள் சமேத ஏகாம்பரநாதர் கோயில் பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது.

கொடியேற்றத்தை ஒட்டி சுவாமிக்கு சிறப்பு அபிஷேக அலங்காரங்கள் நடைபெற்றன. மாலையில் சிம்ம வாகனத்தில் உற்சவமும், கிளி வாகனத்தில் அம்மன் வீதியுலாவும் நடைபெற்றன.

வரும் மார்ச் 30-ம் தேதிவரை நடைபெறும் இந்த விழாவின் முக்கிய நிகழ்வான 63 நாயன்மார்கள் கண்ணாடி விமானத்தில் எழுந்தருளும் நிகழ்ச்சி மார்ச் 23-ம் தேதி நடைபெற உள்ளது.

மறுநாள் மஹா ரதோற்சவம் நடைபெறும். பங்குனி உத்திர திருக்கல்யாண விழா மார்ச் 27-ம் தேதி இரவு தொடங்குகிறது. மறுநாள் காலை 6 மணிக்கு திருக்கல்யாணம் நடைபெறும்.

மார்ச் 30-ம் தேதி கொடி இறக்கத்துடன் இந்த விழா நிகழ்ச்சிகள் நிறைவு பெறுகின்றன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in