Published : 19 Mar 2021 03:16 AM
Last Updated : 19 Mar 2021 03:16 AM

புதுகை மாவட்டத்தில் 35 பேர் வேட்புமனு தாக்கல் :

புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர் வக்கோட்டை தொகுதியில் 3 பேர், விராலிமலையில் ஓ.கார்த்தி பிரபாகரன்(அமமுக) உட்பட 9 பேர், புதுக்கோட்டையில் எம்.சுப்பிரமணியன் (தேமுதிக) உட்பட 8 பேர், திருமயத்தில் 5 பேர், ஆலங்குடியில் 3 பேர் மற்றும் அறந்தாங்கியில் சிவசண்முகம்(அமமுக) உட்பட 7 பேர் என மொத்தம் 35 பேர் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தனர்.

அரியலூர் மாவட்டத்தில்...

அரியலூர் மாவட்டத்துக்கு உட்பட்ட அரியலூர் சட்டப்பேர வைத் தொகுதியில் தேர்தல் நடத்தும் அலுவலர் ஏழுமலையிடம், ஐஜேகே வேட்பாளர் ஜவகர், பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் சவரிஆனந்தம், சுயேச்சை வேட்பாளர்கள் 2 பேர் என 4 வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

ஜெயங்கொண்டம் தொகுதியில் போட்டியிட அண்ணா திராவிடர் கழக வேட்பாளர் நடராஜன், பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் நீலமேகம், ஒரு சுயேச்சை வேட்பாளர் என 3 வேட்பாளர்கள் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தனர்.

பெரம்பலூர் மாவட்டத்தில்...

பெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்பலூர் (தனி) சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் இந்திய ஜனநாயக கட்சி வேட்பாளர் ரெ.சசிகலா, புதிய தமிழகம் கட்சி வேட்பாளர் த. ராதிகா, தேமுதிக வேட்பாளர் கே.ராஜேந்திரன் ஆகியோர் பெரம்பலூர் சார் ஆட்சியர் அலுவலகத்தில் பெரம் பலூர் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் ஜே.இ. பத்மஜாவிடம் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தனர்.

குன்னம் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர் ஏ.எஸ்.சாதிக்பாஷா, தேர்தல் நடத்தும் அலுவலர் எஸ்.சங்கரிடம் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x