Published : 19 Mar 2021 03:16 AM
Last Updated : 19 Mar 2021 03:16 AM

அரியலூர் சட்டப்பேரவைத் தொகுதியில் - அதிமுக வேட்பாளர் பிரச்சாரம் :

அரியலூர்

அரியலூர் சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக சார்பில் மீண்டும் போட்டியிடும் அரசு தலைமைக் கொறடா தாமரை எஸ்.ராஜேந்திரன், அரியலூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட பொய்யூர், மேலகருப்பூர், கல்லக்குடி, பனங்கூர், வாழைக்குழி, ஆத னூர், ஓரியூர், சிலுப்பனூர் உட்பட பல்வேறு கிராங்களில் திறந்த வேனில் கூட்டணிக் கட்சியினருடன் சென்று நேற்று வாக்குசேகரிப்பில் ஈடு பட்டார்.

அப்போது, விவசாயிகளின் சுமையை போக்கும் விதமாக கூட்டுறவு சங்கங்களில் விவ சாயிகள் வாங்கிய பயிர்க் கடன்களை முதல்வர் பழனிசாமி தள்ளுபடி செய்துள்ளார்.

விவசாயிகளின் மீது முழு அக்கறைக் கொண்ட கட்சிதான் அதிமுக. என்னை மீண்டும் சட்டப்பேரவை உறுப்பினராக தேர்ந்தெடுத்தால், தற்போது அதிமுக அறிவித்துள்ள அனைத்து வாக்குறுதிகளையும் மக்களுக்கு முழுமையாக பெற்றுத்தருவேன் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x