17 மோட்டார் சைக்கிள்களை திருடியவர் கைது :

17 மோட்டார் சைக்கிள்களை திருடியவர் கைது  :
Updated on
1 min read

செங்கல்பட்டில் மோட்டார் சைக்கிள்களை திருடிய இளைஞரை போலீஸார் கைது செய்து, அவரிடமிருந்து 17 வாகனங்களை பறிமுதல் செய்தனர்.

செங்கல்பட்டு சுற்று வட்டார பகுதியில் தொடர்ந்து மோட்டார் சைக்கிள்கள் திருடுபோவதாக போலீஸாருக்கு புகார் வந்த நிலையில் செங்கல்பட்டு கூடுதல் கண்காணிப்பாளர் ஆத்ரஸ் பச்சேரா தலைமையில் தனிப்படை அமைத்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில் செங்கல்பட்டு ரயில் நிலையம், பேருந்து நிலையம், அரசு மருத்துவமனை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து வாகன திருட்டில் ஈடுபட்டு வந்த செங்கல்பட்டு கரிமேடு பகுதியை சேர்ந்த விக்கி (25) என்ற இளைஞரை போலீஸார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இளைஞரிடம் இருந்து 17 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in