Published : 17 Mar 2021 03:15 AM
Last Updated : 17 Mar 2021 03:15 AM

ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தேங்காய் ஏலம் :

வாடிப்பட்டியில் நடந்த தேங்காய் ஏலத்தில் அதிகபட்ச விலையாக ரூ.13.20-க்கு ஏலம் போனது.

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் மட்டையுடன் கூடிய தேங்காய் ஏலம் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் நடைபெற்று வருகின்றது. அதனையொட்டி நேற்று நடந்த ஏலத்தில் 7 விவசாயிகளின் 15415 தேங்காய்கள் ஏலம் விடப்பட்டன. இன்று நடந்த ஏலத்தில் 6 வியாபாரிகள் பங்கு பெற்றனர். இதில், அதிகபட்ச விலையாக ரூ.13.20க்கும் குறைந்தபட்சமாக ரூ.9.30க்கும் ஏலம் போனதில் ரூ.1.55 லட்சம் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது.

மேலும் தகவலுக்கு ஒழுங்குமுறை விற்பனைக்கூட மேற்பார்வையாளர் சீனிகுருசாமி 9600802823 எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x