புதுக்கோட்டையில் வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் :

புதுக்கோட்டை அண்ணாசிலை அருகே மத்திய அரசை கண்டித்து நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வங்கி ஊழியர்கள்.
புதுக்கோட்டை அண்ணாசிலை அருகே மத்திய அரசை கண்டித்து நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வங்கி ஊழியர்கள்.
Updated on
1 min read

வங்கிகளை தனியார் மயமாக்கும் மத்திய அரசைக் கண்டித்து புதுக்கோட்டை மாவட்டத்தில் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

புதுக்கோட்டை அண்ணாசிலை அருகே உள்ள இந்தியன் வங்கி கிளை அருகில் வங்கி ஊழியர் சங்கங்களின் ஐக்கிய கூட்டமைப்பு சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்ட பொதுச் செயலாளர் கே.என்.ராஜேந்திரன் தலைமை வகித்தார்.

ஊரக வளர்ச்சி வங்கி ஊழியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் ராமதுரை, சிஐடியு மாவட்டச் செயலாளர் தர், ஏஐடியுசி மாவட்டச் செயலாளர் ராமச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in