விபத்தில் ஜார்கண்ட் இளைஞர் உயிரிழப்பு :

விபத்தில் ஜார்கண்ட் இளைஞர் உயிரிழப்பு :
Updated on
1 min read

ஈரோடு அருகேயுள்ள வேப்பம்பாளையம் பிரிவு பகுதியில், திண்டலில் இருந்து பெருந்துறை நோக்கி நேற்று காலை கார் ஒன்று சென்று கொண்டு இருந்தது. அப்போது பெருந்துறையிலிருந்து வேப்பம்பாளையம் பிரிவுக்குள் செல்வதற்காக, இளைஞர்கள் இருவர் இருசக்கர வாகனத்தில் வந்தனர். அங்கு சாலையை கடக்க முயன்றபோது, அவர்கள் மீது கார் மோதியது.

ஈரோடு தாலுகா காவல்துறையினர் நடத்திய விசாரணையில், இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த மெகாப்கான் (24), தாப்தக்கான் (25) என்பது தெரியவந்தது. ஈரோட்டில் தங்கி கட்டிட வேலை பார்த்து வந்த இவர்களில், மெகாப்கான் உயிரிழந்த நிலையில், அவரது தம்பி தாப்தக்கான் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in