திமுகவின் தேர்தல் அறிக்கையை வாக்காளர்கள் நம்பமாட்டார்கள் : தமாகா இளைஞரணித் தலைவர் கருத்து

திமுகவின் தேர்தல் அறிக்கையை வாக்காளர்கள் நம்பமாட்டார்கள் :  தமாகா இளைஞரணித் தலைவர் கருத்து
Updated on
1 min read

திமுகவின் தேர்தல் அறிக்கையை வாக்காளர்கள் நம்பமாட்டார்கள் என தமாகா மாநில இளைஞரணித் தலைவர் எம்.யுவராஜா தெரிவித்தார்.

அதிமுக கூட்டணியில் ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள தமாகா மாநில இளைஞரணித் தலைவர் எம்.யுவராஜா செய்தியாளர்களிடம் கூறியதாவது:

அதிமுக கூட்டணி வெற்றிக் கூட்டணி. முதல்வராக மீண்டும் பழனிசாமி பதவியேற்பார். அனைத்து குடும்பத் தலைவிக்கும் ரூ.1,500 உதவித்தொகை, ஆண்டுக்கு 6 இலவச சமையல் எரிவாயு சிலிண்டர் வழங்கும் திட்டத்தை முதல்வர் வாக்குறுதியாக அறிவித்துள்ளார். இது பொதுமக்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது.

திமுக தேர்தல் அறிக்கை மக்களை ஏமாற்றும் வகையில் உள்ளது. ஏற்கெனவே அதிமுக அரசு அறிவித்துள்ள பல்வேறு நலத்திட்டங்களை தேர்தல் அறிக்கையில் கூறி, மக்களை திமுக ஏமாற்ற முடியாது. பொய் வாக்குறுதிகளைக் கொண்ட திமுக தேர்தல் அறிக்கையை வாக்காளர்கள் நம்ப மாட்டார்கள். அதிமுக சிறுபான்மையினருக்கு பாதுகாவலராக உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in