Published : 15 Mar 2021 03:13 AM
Last Updated : 15 Mar 2021 03:13 AM

கிராம அளவில் கூட்டணி கட்சியினருடன் கமிட்டி அமைத்து தேர்தல் பணி : காரைக்குடி அதிமுக வேட்பாளர் பேச்சு

சிவகங்கை மாவட்டம், காளையார்கோவிலில் அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சியினரின் செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது. இதில் காரைக்குடி அதிமுக வேட்பாளர் பி.ஆர். செந்தில்நாதன் பேசியதாவது:

தமிழகத்தில் கடந்த 4 ஆண்டுகளில் பல்வேறு இன்னல்கள் ஏற்பட்டபோதும் முதல்வர் பழனிசாமி மக்கள் விரும்பும் திட்டங்களை செயல்படுத்தி உள்ளார். அதிமுகவின் தேர்தல் அறிக்கை எங்களுக்கு சாதகமாக இருக்கும். நான் காரைக்குடி தொகுதியில் குடியிருந்தாலும், எம்பி தேர்தலுக்கு போட்டியிட்டபோது சிவகங்கை தொகுதியில்தான் எனக்கு அதிக வாக்குகள் அளித்து வெற்றி பெற வைத்தீர்கள். அதற்கு அடுத்தபடியாக காரைக்குடியில் அதிக வாக்குகள் கிடைத்தன. நான் இத்தொகுதி மக்களுக்கு விசுவாசமாக இருப்பேன். அதிமுக நிர்வாகிகள் கிராமங்களில் கிளை அளவில் கூட்டணிக் கட்சியினரை சேர்த்து கமிட்டி அமைக்க வேண்டும். அதேபோல் நகரங்களில் தெரு அளவில் கமிட்டி அமைக்க வேண்டும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x