பாளை.யில் கிறிஸ்தவர்கள்தவக்கால சிலுவைப் பயணம் :

பாளையங்கோட்டை  புனித சவேரியார் பேராலயத்தில் இருந்து புனித இஞ்ஞாசியார் கலைமனைகளை நோக்கி தவக்கால சிலுவைப் பயணம் நேற்று நடைபெற்றது. படம்: மு.லெட்சுமி அருண்
பாளையங்கோட்டை புனித சவேரியார் பேராலயத்தில் இருந்து புனித இஞ்ஞாசியார் கலைமனைகளை நோக்கி தவக்கால சிலுவைப் பயணம் நேற்று நடைபெற்றது. படம்: மு.லெட்சுமி அருண்
Updated on
1 min read

பாளையங்கோட்டை புனித சவேரியார் பேராலயத்தில் இருந்து புனித இஞ்ஞாசியார் கலைமனைகளை நோக்கி தவக்கால சிலுவைப் பயணம் நேற்று நடைபெற்றது. பாளை யங்கோட்டை மறைமாவட்ட ஆயர் அந்தோனிசாமி தலைமை வகித்தார். பேராலய பங்கு மக்கள், அருட்சகோதரிகள் தங்கள் கைகளில் சிலுவைகளை ஏந்தியபடி கலந்துகொண்டனர்.

சிலுவைப் பயணம் புனித இஞ்ஞாசியார் கலைமனைகளை அடைந்ததும் சிலுவைப் பாதையும், திருப்பலியும் ஆயர் தலைமையில் நடைபெற்றது. பேராலய பங்குத்தந்தையர்கள் ராஜேஷ், பிரகாசம், ரீகன், புனித இஞ்ஞாசியார் கலைமனைகளின் அருட்சகோதரிகள் பங்கேற்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in