Published : 14 Mar 2021 03:15 AM
Last Updated : 14 Mar 2021 03:15 AM

சட்டப்பேரவைத் தேர்தலில் 100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி - காஞ்சிபுரத்தில் விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் :

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் நேற்று நடைபெற்றது.

காஞ்சிபுரம் அண்ணா விளையாட்டு அரங்கில் தொடங்கிய இந்த மாரத்தான் ஓட்டத்தை ஆட்சியர் மகேஸ்வரி தொடங்கி வைத்தார். இந்த ஓட்டம் கால்நடை மருத்துவமனை சாலை, பேருந்து நிலையம், பச்சையப்பன் பள்ளி, மேட்டுத் தெரு வழியாக மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தை வந்தடைந்தது. தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் இந்த மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது.

போட்டியில் ஆண்கள் பிரிவில் கே.அருண் முதல் பரிசும், எம்.விக்னேஷ் இரண்டாம் பரிசும், என்.ரமணா மூன்றாம் பரிசும் பெற்றனர். பெண்கள் பிரிவில் டி.நிரோஷா முதல் பரிசும், ஆர்.யுவராணி இரண்டாம் பரிசும், எம்.அர்ச்சனா மூன்றாம் பரிசும் பெற்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி வெற்றி கோப்பைகள் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x