Published : 14 Mar 2021 03:15 AM
Last Updated : 14 Mar 2021 03:15 AM

ஓபிஎஸ் தொகுதியில் திமுக, : அதிமுகவினர் மீது தேர்தல் விதிமீறல் வழக்கு :

இது தொடர்பாக போடி நகர் போலீஸார் அதிமுக.நகரச்செயலாளர் பழனிராஜ், அவைத் தலைவர் மணிகண்டன் உள்ளிட்ட 5 பேர் மீது தேர்தல் விதிமீறல், சமூக இடைவெளியை பின்பற்றாதது, அதிக வாகனங்களில் ஊர்வலமாக வந்தது, சாலையை மறித்து பட்டாசு வெடித்தல் தொடர்பாக 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

போடி தொகுதிக்கு திமுக வேட்பாளராக தங்கதமிழ்ச்செல்வன் அறிவிக்கப்பட்டதை வரவேற்று அக்கட்சியினர் பட்டாசு வெடித்தனர். இது தொடர்பாக திமுக.நகரச் செயலாளர் ம.வி.செல்வராஜ், மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் வெங்கடேஷ் உள்ளிட்ட 4 பேர் மீது சமூக இடைவெளியை பின்பற்றாதது, பொது சாலையை மறித்து பட்டாசு வெடித்தல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. சார்பு ஆய்வாளர் அழகுராஜா விசாரித்து வருகிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x