ரூ.1.61 லட்சம் பறிமுதல் :

ரூ.1.61 லட்சம் பறிமுதல்  :
Updated on
1 min read

தி.மலை மாவட்டம் சேத்துப் பட்டு அடுத்த தேவிகாபுரத்தில் தேர்தல் பறக்கும் படையினர் நேற்றுவாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாக வந்த காரை தடுத்து நிறுத்தி சோதனை யிட்டதில், காரில் இருந்த கரைபூண்டி கிராமத்தில் வசிக்கும் திருமால் என்பவரிடம் ஆவணங்கள் இல்லாமல் ரூ.65 ஆயிரம் எடுத்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து, ரூ.65 ஆயிரத்தை பறிமுதல் செய்து கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

இதேபோல், ஆரணி அடுத்த முள்ளிப்பட்டு புறவழிச்சாலையில் தேர்தல் பறக்கும் படையினர் நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, இரு சக்கர வாகனத்தில் வந்தவரிடம் நடத்தப்பட்ட சோதனையில், உரிய ஆவணங்கள் இல்லாமல் ரூ.96 ஆயிரம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

ஆற்காடு பகுதியைச் சேர்ந்த மகேந்திரன் என்பவர், சேவூர் கிராமத்தில் சிமென்ட் கடை நடத்தி வருவதும், சிமென்ட் மூட்டை விற்பனை தொகையை கொண்டு சென்றபோது பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர். பின்னர் அந்த தொகை, கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in