மின்சார ரயில் சேவையில் மாற்றம் :

மின்சார ரயில் சேவையில் மாற்றம்  :
Updated on
1 min read

சென்னை ரயில் கோட்டம் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தாம்பரம் - செங்கல்பட்டு இடையே 3-வது ரயில் பாதை அமைக்கும் பணிகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளதால், சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் மின்சார ரயில்களின் சேவை மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

இந்த தடத்தில் இயக்கப்படும் மின்சார ரயில்களின் வருகை, புறப்பாடு மாற்றம் செய்யப்பட்டு புதிய கால அட்டவணை அமைக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக, சென்னை கடற்கரை - செங்கல்பட்டுக்கு நாளை முதல் வரும் 19-ம் தேதி வரையில் காலை 11 மணி முதல் மதியம் 2 மணி வரையில் நேரடியாக செல்லும் மின்சார ரயில் சேவை இருக்காது. ரயில் சேவை பயணிகளின் சேவை சிறிய அளவில் குறைக்கப்பட்டுள்ள போதிலும், பயணிகள் பாதிக்காத வகையில் சிறப்பு ரயில்கள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in