Published : 11 Mar 2021 03:13 AM
Last Updated : 11 Mar 2021 03:13 AM

கற்போம் எழுதுவோம்: : தலைமை ஆசிரியர்கள் மனு :

காஞ்சிபுரம் முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தில் தலைமை ஆசிரியர்கள் அளித்துள்ள மனு விவரம்:

காஞ்சிபுரம் ஒன்றியத்தில் 47 பள்ளிகளில் ‘கற்போம், எழுதுவோம்’ திட்டம் செயல்படுகிறது. இதில் ஒவ்வொரு மையத்திலும் 50 வயதுக்குமேற்பட்ட 20 பேர் சேர்க்கப்பட்டனர். அவர்களில் பலர் சரிவர வகுப்புகளுக்கு வரவில்லை.

எனவே கூடுதலாக சிலர் சேர்க்கப்பட்டனர். ஆனால் தற்போது முதலில் பதிவு செய்யப்பட்ட 20 பேர் மட்டும் தேர்வில் பங்கேற்க அனுமதிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. அவர்களில் பலர் வகுப்புகளுக்கு வராத நிலையில் அவர்களை எவ்வாறு தேர்வில் பங்கேற்கச் செய்வது?எனவே அனைவருக்கும் தேர்வு நடத்தி சான்றிதழ் வழங்க வேண்டும் அல்லது தேர்வை ரத்து செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x