70 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் :

70 கிலோ புகையிலை பொருட்கள்  பறிமுதல்  :
Updated on
1 min read

ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர் லீலாராம் (27). இவர், திருப்பூர் பிச்சம்பாளையம் பகுதியில் வசித்து வருகிறார்.

திருப்பூரின் பல்வேறு பகுதிகளுக்கும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை சில்லரை விலைக்கு விற்பனை செய்து வந்துள்ளார்.

இதுகுறித்து கிடைத்த தகவலின்பேரில் அனுப்பர்பாளையம் போலீஸார் ஆய்வு மேற்கொண்டதில், 70 கிலோ புகையிலை பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு, பறிமுதல் செய்யப்பட்டது. லீலாராமை கைது செய்து, போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in