சிவகங்கையில் பிளஸ் 1 மாணவி மரணம் : தந்தை போலீஸில் புகார்

சிவகங்கையில் பிளஸ் 1 மாணவி மரணம் :  தந்தை போலீஸில் புகார்
Updated on
1 min read

சிவகங்கை அருகே காந்தி நகரைச் சேர்ந்த கணேசன் மகள் திவ்ய (16) தனியார் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார்.

நேற்று அதிகாலை அவருக்கு திடீரென வாந்தி ஏற்பட்டது. உடனே அவரை அருகில் உள்ள தனியார் கிளினிக்கில் அனுமதித்தனர். சிகிச்சை பெற்று வந்த அவருக்கு திடீரென உடல்நிலை மோசமானது. இதையடுத்து அவரை அவசர ஊர்தி மூலம் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். பரிசோதித்த மருத்துவர்கள் திவ்ய இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இது குறித்து சிவகங்கை டவுன் போலீஸார் விசாரிக்கின்றனர்.

இதற்கிடையே, தனியார் கிளினிக்கில் மருத்துவரின் கவனக்குறைவால் தனது மகள் இறந்ததாக அவரது தந்தை கணேசன் போலீஸில் புகார் தெரிவித்தார். கடந்த வாரம் மதகுபட்டியில் சிகிச்சைக்கு சென்ற பெண் தனியார் கிளினிக்கில் உயிரிழந்தார். அவரது உறவினர்கள் சம்பந்தப்பட்ட மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மறியலில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in