Published : 10 Mar 2021 03:13 AM
Last Updated : 10 Mar 2021 03:13 AM

பட்டாசு வெடித்து கொண்டாடிய தேமுதிக தொண்டர்கள் :

தஞ்சாவூர்

அதிமுக கூட்டணியில் இருந்து தேமுதிக வெளியேறி இருப்பதை வரவேற்று, அக்கட்சியின் தொண்டர்கள் நேற்று பட்டாசு வெடித்து கொண்டாடினர்.

வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் தேமுதிக-அதிமுக இடையே கூட்டணி அமையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீரென தேமுதிக கூட்டணியில் இருந்து வெளியேறி உள்ளது.

இந்நிலையில், அதிமுக கூட்டணியில் இருந்து விலகிய தேமுதிக தலைமையின் முடிவை வரவேற்று, தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியில் அண்ணா சிலை அருகில் தேமுதிக தொண்டர்கள் திரண்டு பட்டாசு வெடித்து கொண் டாடினர்.

மேலும் தேமுதிகவின் நிலைப்பாட்டை ஆதரித்தும், அதிமுகவை கண்டித்தும் முழக் கமிட்டனர்.

இதில், தேமுதிக மாவட்ட துணைச் செயலாளர் செல்வராஜ், பேராவூரணி ஒன்றியச் செயலாளர் செல்லத்துரை, சேதுபாவாசத்திரம் ஒன்றியச் செயலாளர் ராஜேஷ், பேராவூ ரணி நகரச் செயலாளர் எஸ்.ஆர்.சீனிவாசன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x