பெண் தற்கொலை கணவர் கைது :

பெண் தற்கொலை  கணவர் கைது :
Updated on
1 min read

திருப்பூர் மாவட்டம் அவிநாசி வட்டம்சேவூர் அருகே மங்கரசுவலையபாளையம், தண்ணீர்பந்தல் பாளையம் குட்டைகாட்டுத் தோட்டத்தைசேர்ந்த தம்பதி வெங்கடாசலபதி (32),ஜெயந்தி (31). இவர்களுக்கு திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகின்றன. மகன், மகள் உள்ளனர். இந்நிலையில், ஜெயந்தியை பெற்றோர் வீட்டுக்கு சென்று பணம் வாங்கி வருமாறு அடிக்கடி வற்புறுத்தி வந்துள்ளார் வெங்கடாசலபதி. வழக்கம்போல, நேற்று முன்தினமும் தகராறு ஏற்பட்டுள்ளது.

இதனால் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி ஜெயந்தி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். அலறல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர், ஜெயந்தியை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி ஜெயந்தி நேற்று உயிரிழந்தார். இதுதொடர்பாக சேவூர் போலீஸார் வழக்கு பதிந்து வெங்கடாசலபதியை கைது செய்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in