Published : 09 Mar 2021 03:12 AM
Last Updated : 09 Mar 2021 03:12 AM

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் - தேர்தல் விதிமீறல் தொடர்பாக 33 புகார்கள் :

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள 4 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் நேற்று வரை 33 புகார்கள் வரப்பெற்றுள்ளன.

சட்டப்பேரவைத் தேர்தலை ஒட்டி தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டு, தேர்தல் விதிமுறை மீறல் தொடர்பாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்த கண்காணிப்பு தவிர, தேர்தல் விதிமீறல் தொடர் பாக வாக்காளர்கள் புகார் அளிக்கவும் இலவச அழைப்பு எண்களும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கள்ளக்குறிச்சி(தனி), சங்கராபுரம், ரிஷிவந்தியம், உளுந்தூர்பேட்டை உள்ளிட்ட 4 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் தேர்தல் விதிமீறல் தொடர்பாக இலவச அழைப்புகள் மூலம் தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு 7-ம் தேதி வரை 33 புகார்கள் வரப்பெற்றுள்ளன. இதில் 25 புகார்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 7 புகார்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது. ஒரு புகார் மட்டும் நிலுவை யில் உள்ளது.

பெரும்பாலும் கொடி அகற்றப்படவில்லை, ப்ளக்ஸ் பேனர் வைத்திருப்பது போன்ற புகார்கள் வருவதோடு, வாக்காளர் அடை யாள அட்டை கிடைக்கவில்லை என்ற புகார்களும் வருகின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x