பொறியியல் கல்லூரியில் மகளிர் தின விழா :

பொறியியல் கல்லூரியில் மகளிர் தின விழா :
Updated on
1 min read

தேனி நாடார் சரஸ்வதி பொறியியல் மற்றும் தொழில் நுட்பக் கல்லூரியில் சர்வதேச மகளிர் தின விழா நடந்தது. மேலப்பேட்டை இந்து நாடார் உறவின்முறை பொதுச் செயலாளர் டி.ராஜ்மோகன் தலைமை வகித்தார். பொருளாளர் எம்.பழனியப்பன் முன்னிலை வகித்தார்.

பெண்கள் உரிமை அமைப்பு ஒருங்கிணைப்பாளர் ஆர்.சரண்யா வரவேற்றார். கல் லூரிச் செயலாளர் கேஎஸ்.காசிபிரபு, இணைச் செயலாளர் ஏ.ராஜ்குமார், முதல்வர் சி.மதளை சுந்தரம் ஆகியோர் வாழ்த் துரை வழங்கினர்.

தேனி அல்லி நகரம் காவல் நிலைய ஆய்வாளர் என்.மதனகலா சிறப்பு விருந்தி னராகக் கலந்து கொண்டு பேசும் போது, பெற்றோர், ஆசிரியர் களிடம் மாணவிகள் பிரச்சினை களை மறைக்காமல் பேசினாலே அவை தீர்ந்து விடும் என்றார்.

பேராசிரியை கே.மலர் நன்றி கூறினார்.

போடி நகராட்சியில் நடந்த நிகழ்ச்சிக்கு ஆணையாளர் டி.ஷகிலா தலைமை வகித்தார். போடி பிச்சாண்டி நடுநிலைப் பள்ளி ஆசிரியைகள் பத்மாவதி, கவுரி, சந்திரகலா, ஈஸ்வரி, தெய்வஜோதி மற்றும் தலைமை ஆசிரியர்ஆர்.ஜெயக்குமார் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in