Published : 09 Mar 2021 03:13 AM
Last Updated : 09 Mar 2021 03:13 AM

சாத்தான்குளம் வழக்கு விசாரணை ஒத்திவைப்பு :

சாத்தான்குளத்தில் போலீஸா ரால் விசாரணைக்கு அழைத்துச்செல்லப்பட்ட வியாபாரி ஜெயராஜ், அவர் மகன் பென்னிக்ஸ் கொலை செய்யப்பட்டனர்.

இந்த வழக்கில் சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் தர்,சார்பு ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ், தலைமை காவலர் முருகன், காவலர்கள் முத்துராஜ், செல்லதுரை, வெயிலுமுத்து, தாமஸ் பிரான்சிஸ், சமயதுரை உள்ளிட்ட 9 பேரை சிபிஐ போலீ ஸார் கைது செய்தனர்.

இவர்கள் மீது மதுரை நீதிமன்றத்தில் 2027 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. தர் உட்பட 9 பேரையும் போலீஸார் பலத்த பாதுகாப்புடன் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தினர். கைது செய்யப்பட்ட போலீஸார் சார்பில், இரட்டைக் கொலை வழக்கை மதுரை நீதிமன்றத்திலிருந்து வேறு மாநிலத்துக்கு மாற்றக்கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வழக்கின் ஆவணங்கள் முறையாக கிடைக்கவில்லை. இதனால் விசாரணையை ஒத்திவைக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்ளப்பட்டது. இதையடுத்து விசாரணையை நாளைக்கு (மார்ச் 10) ஒத்தி வைத்து நீதிபதி தாண்டவன் உத்தரவிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x