Published : 09 Mar 2021 03:13 AM
Last Updated : 09 Mar 2021 03:13 AM

ராணிப்பேட்டை எஸ்பி அலுவலகத்தில் மகளிர் தின விழா :

உலக மகளிர் தினத்தையொட்டி, வேலூர் கோட்டையில் உள்ள காவலர் பயிற்சி பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காவல் துறையை சேர்ந்த பெண்கள் நேற்று கேக் வெட்டி கொண்டாடினர். அடுத்த படம்: ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் சிவகுமார் முன்னிலையில் கேக் வெட்டி கொண்டாடிய பெண் காவலர்கள்.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மகளிர் தினத்தையொட்டி பெண் காவலர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் சிவகுமார் நினைவுப் பரிசு வழங் கினார்.

ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மகளிர் தின விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பணியாற்றும் பெண் காவலர்கள், அமைச்சுப் பணியாளர்கள் காவல் கண்காணிப்பாளர் டாக்டர் சிவகுமாரை சந்தித்து வாழ்த்துப் பெற்றனர். மகளிர் தினத்தை யொட்டி கேக் வெட்டி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டதுடன் பெண் காவலர்கள், அமைச்சுப் பணியாளர்களுக்கு காவல் கண்காணிப்பாளர் எழுதிய மகளிர் தின கவிதையுடன் நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.

வேலூர்

வேலூர் கோட்டையில் உள்ள காவலர் பயிற்சி பள்ளியில் மகளிர்தின விழா நேற்று கொண்டாடப் பட்டது. பயிற்சி பள்ளி முதல்வர் சுந்தரமூர்த்தி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் துணை காவல் கண்காணிப்பாளர் ரவிச்சந்திரன் வரவேற்றார். காவல் ஆய்வாளர் கனிமொழி முன்னிலை வகித்தார். மகளிர் தின விழாவை முன்னிட்டு பெண் காவலர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x