Published : 09 Mar 2021 03:13 AM
Last Updated : 09 Mar 2021 03:13 AM
குடியாத்தம் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் இருந்து விநாயகர் சிலையை திருடிச்சென்ற மர்ம நபர்கள் குறித்து காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.
குடியாத்தம் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் மற்றும் வட்டாட்சியர் அலுவலகம் புதிதாக கட்டும் பணி தொடங்கியுள்ளது. கட்டுமானப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், அங்குள்ள சிறிய கோயிலில் உள்ள விநாயகர் சிலையை நேற்று காலை காணாமல் போனதால் அதிகாரிகள் திடுக்கிட்டனர். இது குறித்து குடியாத்தம் நகர காவல் துறையினர் விநாயகர் சிலையை திருடிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT