Published : 09 Mar 2021 03:13 AM
Last Updated : 09 Mar 2021 03:13 AM

அகிலாண்டேஸ்வரி கல்லூரியில் மகளிர் தின விழா :

தி.மலை மாவட்டம் வந்தவாசி  அகிலாண்டேஸ்வரி மகளிர் கல்லூரியில் முதல் தலைமுறை வாக்காளர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் உலக மகளிர் தின விழா நேற்று நடைபெற்றது.

கல்லூரி நிறுவனர் முனிரத்தினம் தலைமை வகித்தார். துணை முதல்வர் சுகுணா வரவேற்றார். ஆட்சியர் சந்தீப் நந்தூரி சிறப்புரையாற்றினார். 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தும் விழிப்புணர்வு பலகையில் மாணவிகள் கையொப்பமிட்டனர்.

இதில் பங்கேற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இதில், துணை ஆட்சியர் (பயிற்சி) அஜிதா பேகம், மகளிர் திட்ட இயக்குநர் சந்திரா, கல்லூரி செயலாளர் ரமணன் உட்பட பலர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியை இயற்பியல் துறை தலைவர் செல்வகுமார் தொகுத்து வழங்கினார். 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x