மார்ச் 13-ல் புதிய வாக்காளர் அட்டை விநியோகம் :

மார்ச் 13-ல் புதிய வாக்காளர் அட்டை விநியோகம் :
Updated on
1 min read

வரும் 13 மற்றும் 14 ஆகியதேதிகளில் வாக்காளர்களுக்கு புதிய மின்னணு வண்ண வாக்கா ளர் அட்டை வழங்கப்படும் என கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட் சியர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து நேற்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

நடைபெறவுள்ள சட்டப் பேரவைத் தேர்தலில் 100 சதவீத வாக்களிப்பை உறுதி செய்யும் வகையில் புதிதாக வாக்காளராக பதிவு செய்துள்ள அனைவருக்கும் புதிய மின்னணு வண்ண வாக்காளர் அடையாள அட்டை 'NVSP' மற்றும் 'VHA' ஆகிய இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்ய வழிவகை செய்யப்பட்டது. போதுமான முன்னேற்றம் இல்லாத காரணத்தால், அந்தந்த வாக்குச் சாவடிகளில் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே வரும் 13 மற்றும் 14-ம் தேதிகளில் சிறப்பு முகாமிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. புதிதாக விண்ணப்பித்தவர்கள் முகாமிற்கு சென்று வண்ண வாக்காளர் அட்டையை பெற் றுக் கொள்ளலாம் என்று தெரி வித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in