Published : 07 Mar 2021 03:15 AM
Last Updated : 07 Mar 2021 03:15 AM

வாக்காளர் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் :

உடுமலை: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் மத்தியப் பேருந்து நிலையத்தில் செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் க.விஜயகார்த்திகேயன் ஆய்வு செய்து, மின்னணு விளம்பர வாகனத்தில் விழிப்புணர்வு குறும்படங்கள் ஒளிபரப்பு வாகனத்தையும் தொடங்கி வைத்தார்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது,"இந்த வாகனம் மாநகராட்சி, நகராட்சி,பேரூராட்சி மற்றும் ஊராட்சி பகுதிகளில் மக்களிடையே திரையிடப்படும். திருப்பூர் மாவட்டத்திலுள்ள 8 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. பள்ளி, கல்லூரி மாணவர்களைக் கொண்டு இருசக்கர வாகன பேரணி, மனித சங்கிலி மற்றும் பெண்களுக்கு கோலப் போட்டிகள், மெஹந்தி இடுதல் உட்பட பல்வேறு போட்டிகள் நடைபெற உள்ளன. தாராபுரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சார் ஆட்சியர் பவன்குமார், வட்டாட்சியர்கள் சுந்தரம், ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்"என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x