Published : 07 Mar 2021 03:15 AM
Last Updated : 07 Mar 2021 03:15 AM

100% வாக்களிக்க வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி :

காஞ்சிபுரத்தில் 100% (அனைவரும்) வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி நேற்று நடைபெற்றது.

காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி சார்பில் நடைபெற்ற இந்தப் பேரணியில் 200-க்கும் மேற்பட்ட பள்ளிமாணவ, மாணவிகள் பங்கேற்றனர். பள்ளி அருகே தொடங்கிய இந்தப் பேரணியை மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி கொடியசைத்து தொடங்கி வைத்தார். உடன் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் பி.ஜெயசுதா, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஆறுமுகம், காஞ்சிபுரம் மாவட்ட கல்வி அலுவலர் எல்லப்பன், காஞ்சிபுரம் நகராட்சி ஆணையர் மகேஸ்வரி உள்ளிட்ட பலர்பங்கேற்றனர். இந்த மாணவ,மாணவிகள் நகரின் முக்கிய வீதிகளில் ஊர்வலமாகச் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x