100% வாக்களிக்க வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி :

காஞ்சிபுரத்தில் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மாணவ, மாணவிகள் சார்பில் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைக்கிறார் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி.
காஞ்சிபுரத்தில் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மாணவ, மாணவிகள் சார்பில் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைக்கிறார் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி.
Updated on
1 min read

காஞ்சிபுரத்தில் 100% (அனைவரும்) வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி நேற்று நடைபெற்றது.

காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி சார்பில் நடைபெற்ற இந்தப் பேரணியில் 200-க்கும் மேற்பட்ட பள்ளிமாணவ, மாணவிகள் பங்கேற்றனர். பள்ளி அருகே தொடங்கிய இந்தப் பேரணியை மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி கொடியசைத்து தொடங்கி வைத்தார். உடன் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் பி.ஜெயசுதா, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஆறுமுகம், காஞ்சிபுரம் மாவட்ட கல்வி அலுவலர் எல்லப்பன், காஞ்சிபுரம் நகராட்சி ஆணையர் மகேஸ்வரி உள்ளிட்ட பலர்பங்கேற்றனர். இந்த மாணவ,மாணவிகள் நகரின் முக்கிய வீதிகளில் ஊர்வலமாகச் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in