Published : 07 Mar 2021 03:15 AM
Last Updated : 07 Mar 2021 03:15 AM

வாகனங்கள் சேதம் நடவடிக்கை கோரி மறியல் :

சின்னசேலத்தை அடுத்த தொட்டியம் கிராம ஊராட்சி மன்ற அலு வலகம் அருகே, அப்பகுதியில் வசிப்போர் தங்களது வாகனத்தை நிறுத்தி வைத்திருந்தனர். மேலும்ஊராட்சியில் குப்பைகளை சேகரிக்கும் பேட்டரி வாகனங் களும் நிறுத்தப்பட்டிருந்தன.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மர்ம நபர்கள் ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களை சேதப்படுத் திவிட்டுச் சென்றதாகக் கூறப்படுகிறது. நேற்று அதிகாலை இதைக் கண்ட வாகன உரிமை யாளர்கள், வாகனத்தைச் சேதப் படுத்திய மர்ம நபர்கள் மீது நடவடிக்கை கோரி தொட்டியம் பேருந்து நிறுத்தம் அருகே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவலறிந்த சின்னசேலம் போலீஸார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சு வார்த்தை நடத்தினர். நடவ டிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததைத் தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x