திமுக பொதுக்கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு :

திமுக பொதுக்கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு :
Updated on
1 min read

திருச்சியில் இன்று நடைபெறும் பொதுக்கூட்டத்தில் திமுகவினர் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என்று கடலூர் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் எம்ஆர்கே.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

திமுக தலைவர் ஸ்டாலினை முதல்வர் ஆக்குவதற்கு உறுதிஏற்கும் வகையில் விடியலுக்கான முழக்கம், லட்சிய பிரகடனம் வெளியீடு பொதுக்கூட்டம் திருச்சி சிறுகனூரில் இன்று (மார்ச் 7) காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெறவுள்ளது.

இக்கூட்டத்தில் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூராட்சி திமுக நிர்வாகிகள், அனைத்து அணிகளின் நிர்வாகிகள், திமுக முன்னோடிகள் உள்ளிட்ட அனைவரும் பெருந் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in