குட்டியுடன் புள்ளி மான் எரிப்பு :

குட்டியுடன்  புள்ளி மான் எரிப்பு :
Updated on
1 min read

பெரம்பலூர் அருகே உள்ள அரணாரை-ரெங்கநாதபுரம் பிரிவு சாலையில், மருதையான் கோயில் அருகே பெரியசாமி என்பவருக்குச் சொந்தமான வயலில் குட்டியுடன் 3 வயது மதிக்கத்தக்க புள்ளி மான் எரிந்த நிலையில் கிடந்தது.

தகவலறிந்த போலீஸாரும், வனத் துறையினரும் அங்கு சென்று, மான் மற்றும் குட்டியின் உடல்களை மீட்டு, வனப்பகுதியில் அடக்கம் செய்தனர். இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்து அதே பகுதியைச் சேர்ந்த பெரியசாமி, ராஜமாணிக்கம், பழனியாண்டி, மாரிமுத்து ஆகியோரிடம் விசாரித்து வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in