

தூத்துக்குடி மாநகராட்சியில் கழிவு பொருட்களில் இருந்து பல்வேறு கலைநயம் மிக்க பொருட்கள் தொடர்ந்து உருவாக்கப்பட்டு வருகின்றன. கடந்த சில மாதங்களுக்கு முன் பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்களைக் கொண்டு குளியலறையை உருவாக்கியது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. தற்போது பழைய இரும்பு டிரம்களைக் கொண்டு கலைநயம் மிக்க ஷோபாவை உருவாக்கி அசத்தியுள்ளனர் மாநகராட்சி பணியாளர்கள்.
தூத்துக்குடி மாநகராட்சிசார்பில் கொசு ஒழிப்புக்காக தண்ணீரில் எண்ணெய் (MosquitoLarvicidal Oil) தெளிக்கப்பட்டது. இந்த எண்ணெய் வாங்கியசுமார் 70இரும்பு டிரம்கள் தூத்துக்குடி விவிடி சிக்னல் அருகேயுள்ள மாநகராட்சி வார்டு அலுவலகத்தில் குப்பைபோல தேங்கிக்கிடக்கிறது. இவற்றை கலைநயமிக்க ஷோபாக்களாக மாற்ற மாநகராட்சி அதிகாரிகள் முடிவு செய்தனர்.
ஆணையர் பாராட்டு
இந்த ஷோபா செட் மாநகராட்சி மைய அலுவலகத்தின் வரவேற்பறையில் வைக்கப்பட்டுள்ளது. ஷோபா செட்டை பார்த்த ஆணையர் சரண்யா அறி, மாநகராட்சி பணியாளர்களை வெகுவாக பாராட்டினார்.
ரூ.2 ஆயிரம் செலவு