Published : 06 Mar 2021 03:14 AM
Last Updated : 06 Mar 2021 03:14 AM
தருமபுரி மாவட்டம் பென்னா கரம் ஒன்றியம் பிக்கிலி ஊராட்சிக்கு உட்பட்ட பெரியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னசாமி (55). கடந்த 3-ம் தேதி மாடு மேய்க்கச் சென்ற சின்னசாமி அன்று மாலை வீடு திரும்பவில்லை. மறுநாள் அவரது குடும்பத்தாரும், உறவினர்களும் வனப்பகுதியில் தேடினர்.அப்போது, பிக்கிலி வனத்தில் தேவர் மடுவு என்ற பகுதியில் வனவிலங்கு தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்து கிடந்தது தெரியவந்தது.
இதுபற்றி தகவல் அறிந்த பாலக்கோடு வனச்சரகர் செல்வம் தலைமையிலான அதிகாரிகள்,யானை தாக்குதலுக்கு உள்ளாகி சின்னசாமி உயிரிழந்ததாரா அல்லது அவரது உயிரிழப்பில் வேறு பின்னணி உள்ளதா என விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT