Published : 06 Mar 2021 03:15 AM
Last Updated : 06 Mar 2021 03:15 AM
திருவண்ணாமலை : செய்யாறில் மின்சாரம் தாக்கி சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார்.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு நகரம் புதுத்தெருவில் வசிப்பவர் தமிழ்செல்வன் மகள் வைஷாலி (16). இவர், செய்யாறில் நகராட்சி மூலம் விநியோகிக்கப்படும் குடிநீரை குடத்தில் பிடிக்க குடிநீர் பைப்பை பிடித்தபோது, திடீரென மின்சாரம் தாக்கியது. அவரது அலறல் சத்தம் கேட்டு, அவரது உறவினர் மோகன்ராஜ் காப்பாற்ற முயன்றார். அவரையும் மின்சாரம் தாக்கியது. இதில் படுகாயமடைந்த இருவரும் செய்யாறு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி வைஷாலி உயிரிழந்தார். மோகன்ராஜ் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து செய்யாறு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT