Published : 03 Mar 2021 03:29 AM
Last Updated : 03 Mar 2021 03:29 AM

எம்ஜிஆர் சிலை எரிப்பு விவகாரம்திமுக பிரமுகர் கைது

திருப்பத்தூர் அடுத்த கந்திலி ஒன்றியம் கெஜல்நாயக்கன்பட்டி பேருந்து நிறுத்தம் அருகேஇருந்த எம்ஜிஆர் உருவச்சிலை மீது போர்த்தப்பட்டிருந்த துணியில் திமுகவினர் வெடித்த பட்டாசு தீப்பொறி பட்டு சிலை சேதமடைந்தது.

இது குறித்து கந்திலி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில், எம்ஜிஆர் சிலை தீயில் எரிந்த சம்பவத்துக்கு கந்திலி திமுக ஒன்றிய பொருளாளர் நாகராஜ் (55) வருத்தம் தெரிவித்திருந்தார். இருப்பினும், தேர்தல் நன்னடத்தை விதி முறைகள் அமலில் இருப்பதால் தேர்தல் விதிமுறைகளை மீறி செயல்பட்டதாக கூறி நாகராஜை நேற்று காவல் துறையினர் கைது செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x