என்கவுன்ட்டர் இளைஞரின் உடல் ஒப்படைப்பு

என்கவுன்ட்டர் இளைஞரின்   உடல் ஒப்படைப்பு
Updated on
1 min read

கடலூர் சுப்பராயலுநகர் பூந்தோட்டம் பகுதியைச் சேர்ந்த ரவுடி வீரா என்ற வீராங்கன் என்பவர் கடந்த மாதம் 16-ம் தேதி தலை துண்டித்து கொலை செய்யப்பட்டார். இக்கொலை தொடர்பாக கடந்த மாதம் 17-ம் தேதி கடலூர் குப்பங்குளத்தைச் சேர்ந்த கிருஷ்ணன்(30) என்பவர் புதுப்பேட்டை போலீஸில் பிடிபட்டு தப்ப முயன்றார். அப்போது கிருஷ்ணன் என்கவுன்ட்டர் செய்யப்பட்டு சுட்டுக்கொல்லப்பட்டார்.கிருஷ்ணனின் என்கவுன்ட்டர் குறித்துசிபிஐ விசாரணை நடத்த வேண்டும். அவரது குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் எனக் கூறி அவரது உறவினர்கள் உடலை வாங்க மறுப்பு தெரிவித்து வந்தனர். கடந்த 11 நாட்களுக்கு பிறகு நேற்று கிருஷ்ணனின் உடலை வாங்க உறவினர்கள் ஒப்புக்கொண்டனர். இதனையடுத்து கிருஷ்ணனின் உடல் உறவினர்களிடம் நேற்று ஒப்படைக்கப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in