தேர்தல் பணிக்கு துணை ராணுவத்தினர் வருகை

சட்டப்பேரவைத் தேர்தல் பாதுகாப்புப் பணிக்காக துணை ராணுவ வீரர்கள் 92 பேர் நேற்று ஈரோடு வந்தனர்.
சட்டப்பேரவைத் தேர்தல் பாதுகாப்புப் பணிக்காக துணை ராணுவ வீரர்கள் 92 பேர் நேற்று ஈரோடு வந்தனர்.
Updated on
1 min read

சேலம் மாநகரம் மற்றும் மாவட்டப் பகுதிகளின் தேர்தல் பாதுகாப்பு பணிக்காக 2 கம்பெனி துணை ராணுவத்தினர் (தொழிலக பாதுகாப்புப் படை) 189 பேர் நேற்று ரயில் மூலம் சேலம் வந்தனர்.

எஸ்பி சிவகுமார்பாண்டே தலைமையில் வந்த துணை ராணுவத்தினரில் 91 பேர் சேலம் மாவட்ட காவல்துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு ஓமலூரில் உள்ள தனியார் கல்லூரியில் தங்க வைக்கப்பட்டனர். சேலம் மாநகர காவல்துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட 92 பேர் சேலம் மாநகர காவல்துறை திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். தருமபுரி மாவட்ட தேர்தல் பாதுகாப்புப் பணிக்கு துணை ராணுவப் படை வீரர்கள் 90 பேர் வருகை தந்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in